search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேன் டிரைவர் கைது"

    • முருகனை தாக்கி ஜெயச்சந்திரன் கொலை மிரட்டல் விடுத்தார்.
    • ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் முருகன் புகார் அளித்தார்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி வடக்குத்தெரு காலனியை சேர்ந்தவர் முருகன் (43). விவசாய கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று பட்டாளம்மன் கோவில் அருகே தனது மனைவி சித்ரா (40) உடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காலனி தெருவை சேர்ந்த ஜெயச்சந்திரன் (28) என்பவர் சித்ராவை தனது செல்போனில் படம் பிடித்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த முருகன் அவரிடம் இருந்த செல்போனை பறித்து பார்த்த போது அதில் தனது மனைவியின் புகைப்படம் பதிவாகி இருந்தது குறித்து கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. முருகனை தாக்கி ஜெயச்சந்திரன் கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் முருகன் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் முனியம்மாள் வழக்குப்பதிவு செய்து ஜெயச்சந்திரனின் செல்போனை வாங்கி சோதனை செய்தார்.

    தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணிபுரியும் ஜெயச்சந்திரன் பள்ளி, கல்லூரி மாணவிகள் புகைப்படம் உள்பட தெருக்களில் நடந்து செல்லும் பெண்களின் புகைப்படம் என மொத்தம் 1500 போட்டோக்களை பதிவு செய்து வைத்திருந்தார். இதனை அவர் எதற்காக பதிவு செய்து வைத்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் ஜெயச்சந்திரனை போலீசார் கைது செய்தனர்.

    • கல்லூரிக்கு வந்த மாணவிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
    • கழிவறைக்கு சென்ற மாணவிக்கு அங்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி நிடாடா பகுதியை சேர்ந்தவர் 16 வயது இளம்பெண்.

    இவர் அங்குள்ள கல்லூரியில் இன்டர்மீடியட் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரும், இவரது தூரத்து உறவினரான வேன் டிரைவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அப்போது இவர்கள் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் மாணவி கர்ப்பமானார்.

    கர்ப்பிணியாக இருந்ததை மறைத்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை கல்லூரிக்கு வந்த மாணவிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து கழிவறைக்கு சென்ற மாணவிக்கு அங்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

    மாணவி பிரசவ வலியால் கதறிய சத்தத்தை கேட்ட சக மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கழிவறைக்கு சென்று பார்த்தனர். அங்கு குழந்தையுடன் மாணவி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மாணவியும் குழந்தையும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து போலீசாருக்கு ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு வேன் டிரைவரை கைது செய்தனர்.

    ×